Aug 31, 2011

இனி ஒரு விதி செய்வோம்!


தமிழா!

மூன்று லட்சம்
தமிழர்களின் 
மரண ஓலம் கேட்டு
முடங்கிக் கிடந்த 
உன்னை 
இந்த மூன்று தமிழர்களின்  
மரண ஓலை
தட்டி எழுப்பியது
உன் 
தன்மானம் எழுந்தது!

கூறு பட்டுக்கிடந்த
உன்னை ஒரு
கூட்டமாக இணைத்த
அரசாணை ஒருவேளை
முன்னமே
வந்திருந்தால் நீ
முள்வேலி தமிழனைக்
காத்திருப்பாயோ?

ஒரு தமிழனாய்க்
கேட்கிறேன் எங்கே
உன் வீரம்?
தன்மானம்?
ஒற்றுமை?
அன்று!!!

இனி ஒரு விதி செய்வோம்
என்றான் பாரதி!
இது ஒரு தொடக்கம் தான்!!

தமிழா,
வீழ்ந்தது போதும்!
வீறு கொண்டு எழு!
சினிமாவை வாழ்க்கை என நம்பி
சிந்தனையை
இழக்காதே!
சாதியும் மதமும்
உன்னை சந்தியில்
நிறுத்தி இருக்கிறது!
தாய்த் தமிழ் மட்டும் தான்
உன்னை உலகிற்கு
உணர்த்தும்!

உணர்வு கொள்!
தமிழ் உணர்வு கொள்!
உயர்ந்திடு!
உன்னை
உயர்த்திடு!!                                                        - சுரேஜமீ

Aug 29, 2011

தண்டனை!

காவல், கடுங்காவல், 
கால அளவுகள்,
ஆயுள் தண்டனை,
இரட்டை ஆயுள் தண்டனை,
இவை எல்லாம் குற்றம்
செய்தவனைத் திருத்த 
சட்டம் செய்யும் முயற்சி!

நிச்சயமாக சுயஅறிவு
உள்ள எவனும்
திருந்துவதற்கு 
ஒரு வாய்ப்புதான்
தண்டனை!

ஆனால், 
சட்டம்
வாய்ப்பே
வழங்காத ஒரு
தண்டனை
மரண
தண்டனை!

மனிதம் மாண்டுபோனது
மரண தண்டனையால்!

நாளைய 
விடியலே 
நம்பிக்கையில்தானே?
இந்நிலையில் 
சட்டம் மட்டும்
ஏன் நம்பிக்கை
இழந்தது
மரண தண்டனைக்
குற்றவாளி திருந்த மாட்டனென்று?                                                 - சுரேஜமீ

Aug 28, 2011

தீவிரவாதம்!

ஒருவன் 
சிலநொடிகள் தன்
சிந்தையை 
மறந்ததால் 
சிதறடிகப்பட்டது
அவன் வாழ்க்கைமட்டும் அல்ல!
அருகே நின்ற 
அவனியின் 
பிறப்பும் மனிதனின் 
படைப்பும் தான்!                                              - சுரேஜமீ

காந்தியம்!

நூறு ஆண்டுகளுக்குப்
பின்னும்
காந்தியம் தன் சக்தியை
நிருபித்து இருக்கிறது!

அஹிம்சையின் 
அழியாநிலையை
அகிலம் 
உணர்ந்து இருக்கிறது!

ஆயுதத்தால் 
அச்சுறுத்தும் 
தீவிரவாதமே 
திரும்பிப்பார்!
உன்னைத் 
திருத்திக்கொள்!

அஹிம்சையின் 
அழியாநிலையை
அகிலம் 
உணர்ந்து இருக்கிறது!!

அண்ணல் காந்தி
அன்னா ஹசாரேவாக
அரிதாரம் பூசி மக்களின்
அதிகாரம் வென்றிருக்கிறார்!

இந்தியனே 
உன்னை நீ
வாழ்த்திகொள்!
உன் வலிமையை
உலகுக்கு எடுத்துக்காட்டிய
திருநாள் இன்று!

அண்ணலின் 
கனவை
அன்னாவை பற்றி
வென்றெடு!

வாழ்க பாரதம்!                                  -சுரேஜமீ

Aug 24, 2011

மனிதநேயம்!

முல்லைக்கு தேர் கொடுத்த
பாரி!
பறவைக்கு தன் உடல் கொடுத்த
சிபி சக்ரவர்த்தி!
வாடிய பயிரைக் கண்டபோதெலாம் 
வாடிய வள்ளலார்!
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த உலகத்தை அழித்திடிவோம் என்ற பாரதி!

இவர்களெல்லாம் வாழ்ந்த இந்நாட்டில் 
இன்று நடப்பது என்ன?

முதியோர் இல்லத்துக்கு
பெற்றோரை அனுப்பும் பிள்ளைகள்!
பிறந்த குழந்தையைத் 
தொட்டியில் எறியும் தாய்!
பக்கத்துக்கு வீட்டில் நடக்கும்
பாதகத்தை வேடிக்கை பார்க்கும்
அவல மனிதர்கள்!
காவலர் எதிரிலேயே 
காணும் கொலைகள்!
போக்குவரத்து நெரிசலில் 
காத்துநிற்கும் உயிர்காக்கும் 
வாகனங்கள்!

ஏ மனிதநேயமே!
எங்கே சென்றாய்?
உலகுக்கே பறைசாற்றிய
என் இனம் இன்று
ஊனமாய் நிற்கிறது 
உனை இழந்து!

மீண்டு வா! மீண்டு வா!
மானுடம் வாழ!                                                           -சுரேஜமீ

Aug 19, 2011

தற்கொலை!

தன்மீது நம்பிக்கை 
இழந்தவன்
தமிழகராதிக்கு 
கொடுத்த கொடைச் சொல்!

உணர்ச்சிகளை
கொச்சைப்படுத்திய 
கோழையின் முடிவை 
விளிக்கும் சொல்!

அமாவாசையன்று 
நிலவைத் தேடி
இனி நிலவே வானில் 
வராதென்று நினைத்த 
முட்டாளின் முடிவுரை!                                         -சுரேஜமீ

Aug 17, 2011

அன்னா ஹசாரே!

இந்தியாவின் இந்நாள்
தலைப்பு செய்தி!

அரசாங்கத்தை அதிரவைக்கும்
ஆற்றல்மிகு காந்தியவாதி!
இந்தியனின்
ஈடில்லா பிரதிபலிப்பு!
உண்மையான லோக்பால் வேண்டி
ஊழலற்ற இந்தியாவிற்காக
எட்டு திக்கும் மக்களை திரட்டி
ஏடுகளின் பக்கத்தை நிரப்பும்
ஐயமற்ற அன்னாவின் உண்ணாவிரதம்!
ஒடுக்க நினைத்த அரசை எதிர்த்து 
ஓங்கி ஒலிக்கும் குரல்கள் எங்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் 
தாயின் மணிக்கொடி 
தன்தலையை சற்றே 
தாழ்த்திக்கொண்டது 
தன் மக்கள் படும்பாடு கண்டு!

என்ன கேட்டார் அன்னா?
மக்கள் தேர்ந்தெடுத்த மன்னன்
மக்கள்முன் நிற்க 
மௌனிப்பானேன்?                            - சுரேஜமீ

Aug 16, 2011

நீதி


சாதியின் பெயரால்
நீதி விலை பேசப்ப்படுமாயின்
தாயின் கற்புகூட
தனயன் எதிரில் 
பறிபோகும் நாள் 
வெகுதொலைவில் இல்லை!                                             - சுரேஜமீ

அன்பு!

அன்பிற்கும் உண்டோ 
அடைக்கும் தாழ் என்றான் வள்ளுவன்!
ஆனால் தாழ்இல்லா அன்பு
பாழென்றது பட்டறிவு!                                                          - சுரேஜமீ 

Aug 15, 2011

65-வது சுதந்திர தினம்!



இந்திய விடுதலை
இன்று அகவை அறுபத்து நான்கு கடந்து
அறுபத்து ஐந்தில் அடியெடுத்து வைக்கும் வேளை
நாம் செய்த சாதனைகள் 
நமை காட்டும் அடையாளம்!


உலக வரைபடத்தின் ஒரு பகுதி
இன்று உலகையே
வரையும் படம் என்றால்
அதுதான் நாம் தரும் செய்தி
இந்த உலகத்துக்கு!


மக்களாட்சி முறைக்கு ஒரு
மகத்தான மேற்கோளாய்
மேற்கத்திய நாடுகளே
இந்தியா தானென்று
இறுதியிட்டு கூறுவது
இந்தியனின் பெருமையன்றோ!


பட்டினி சாவினின்று
பரிதவிக்கும் மக்களின்
பசிப்பிணியை
போக்கிட்ட  ஒரு
பசுமை புரட்சி!


அந்நியர் வந்து இங்கு
தொழில் தொடங்கும்
காலம் போய்
அந்நிய நாட்டினிலும்
இந்தியர்கள்
தொழில் செய்யும் காலமிது!


பெண்ணீயம் என்பது
வெறும் ஏட்டில் மட்டுமன்றி
நாற்திசையும் இன்று
நம் பெண்மணிகளின்
சாதனையை நாடறியும் நன்றே!


கல்வியில் நாம் தொட்ட
களமின்று
கணினியுகம் பறைசாற்றும்!
உலக பொருளாதாரம் சற்றே
மந்தமாக,
இந்திய பொருளாதார ஏற்றத்தின்
உச்சி சொல்லும் நம் கல்வியின் மாற்றத்தை!


வானத்தின் எல்லை
எட்டாதோ என்று
எண்ணிய காலமின்றி
எண்ணிலடங்க செயற்கைக்கோள்
விண்ணிளின்று பறக்குது காண்!


வெள்ளையர்கள் விளையாட்டம்
கிரிக்கெட்டில்
இதுவரை நாம்
இரண்டு முறை பட்டம் வென்றோம்
இளைஞர்களின் சக்தியது!


எத்தனை மொழிகள் இங்கே,
எத்தனை மதங்கள் இங்கே
அத்தனை இருந்தபோதும்
இந்தியன் என்ற சொல்லே
எம்மை உவகை கொள்ளசெய்யும்
என்றில் ஐயமும் உண்டோ சொல்!


இத்தனை கண்டுவிட்டோம்
இனி என்ன செய்யவென்று
சோம்பி இராமல்
இந்தியனே புறப்படு ஒரு
புதிய பாரதம் படைத்திட!
அன்றை நாள் உலகினில்
உன்னாடே வல்லரசு!                                                -சுரேஜமீ

Aug 14, 2011

விலை ஏற்றம்!

கோள்களின் உச்சத்தை 
விஞ்சிவிடுமோ
இந்த மண்ணிலிருந்து
விண்ணுக்கு தாவும்
விலை ஏற்றம்?                                    - சுரேஜமீ

Aug 11, 2011

தங்கம்

ஒரு உலோகம் 
உலகத்தை
ஆட்டிப்படைக்கிறது!                                                      - சுரேஜமீ












கடவுள் வாழ்த்து!

                          
இப்பிறவிதனில் யானிங்கு வந்தபயன் முன்னமே தானறிந்து
எப்பொழுதும் என்சிந்தை விட்டகலாது வழிநடத்தி
திண்ணமுடன் இட்டபணி பிறழாது செய்திடவே
தாயே அருள்வாய் நீ!                                                                              - சுரேஜமீ