இறையும் மறையும்
மறையும் இறையும்
ஒன்றே!
மனமே நில்
ஓரிடத்தில்
சற்றே உற்றுநோக்கு
உன் செயலை!
உள்ளமும் சொல்லும்
செயலும் உண்மை வழியே
சென்று
உலக நலனில்
உலக நலனில்
முடிந்தால்
நீயே
நீயே
முற்றும் அறிந்த
இறையே
என்று
என்று
மறைகள் ஓதும்
நன்றே!
நிரந்தரமில்லா உலகில்
நிதர்சனமற்றுத் திரிந்து
அழுக்காறு , அகங்காரம், ஆசை,
ஆட்டிப்படைக்கும் பந்தம் பற்றி
நெறிகள் தவறிய செல்வம் ஈண்டு
நீதி மாறிய பாதை சென்றால்
நித்தம் உன்னை கொல்லும்
அதுவும்
இறையே என்று
இறையே என்று
மறைகள் ஓதும்
நன்றே!!
உருவம் அருவம்
எது நீ ஏகிலும்
இன்றே
செல்வாய்
அதன் வழி
நன்றே
உணர்வாய்
இறையும் மறையும்
என்று!
இறையும் மறையும்
என்று!
நலமே விளையும்
நன்று ! - சுரேஜமீ
நன்று ! - சுரேஜமீ