Dec 22, 2011

ஏசுவே எம் ஜீவனே!

இயேசுவை
மனமே
இதயத்தில்
இறுத்து,
இன்னல்கள்
விலகிடுமே!!

காசினில்
யாவும்
அன்பென்றும்
நிலைத்து,
காரிருள்
அகன்றிடுமே!!

போற்றுவோம்
இறையே
இயேசுவை நாமே!
நானிலம்
செழித்து,
நாற்பக்கம்
பகையும்
அழிந்திடவே!!

அன்பினைப் பேணு;
மாசினை அகற்று!
மகிழ்ச்சியைப்
பெருக்கி,
மாண்புடன்
வாழ்ந்திடவே!!

இயேசுவின்
வழியை
உறுதியாய்ப்
பற்று!
உயர்ந்திடுவாய்
மனமே!!

இயேசு
எம் ஜீவன்,
எமக்கில்லை
துயரம்,
மேய்ப்பனும்
அவனே
எனை மீட்பனும்
அவனேயாம்!!                                          -சுரேஜமீ 

Dec 12, 2011

சர்க்கரை நோய்?

சர்க்கரை நோய்?

கணையம்
கடவுள் கொடுத்த
வரம்!

ஐம்புலன்களின்
அடக்கவில்லை எனில்
ஆறறிவின்
பயனேது?
உண்ணும் உணவே
சர்க்கரையாய்  மாறி,
இரத்தத்தில் கலந்து,
சத்தாக மாறும்,
என அறிவியல்
சொல்லியும்
அறியாமல் நாம்,

துரித உணவும்,
நினக்கும்போதெல்லாம்
உண்பதும்,
கணையத்திற்கு ஒவ்வா!

வண்டு தேனை
மலரிலிருந்து
உறிஞ்சுவது போல,
கணையம்
சர்க்கரையைப்
பிரித்தெடுக்கும்!

செரிமானத்திற்க்குத்
தேவையான
கணைய நீர்
சுரக்கா சர்க்கரை
சிறுநீராய் வெளியேற,
முறையான சர்க்கரை
இரத்தத்தில் கலக்கிறது!

தேவைக்கு மிகுதியானால்
சேமிப்பும் நடக்கும்!
என்ன விந்தை
இறைவன்
படைப்பில்!

சேமிப்பு கரைந்தாலோ,
கணையம் ஏற்காத
சர்க்கரை உடலில்
இருந்தாலோ,
நோய் என்று சொல்கிறது
மருத்துவம்!

மனிதா
சற்றே யோசி!
காரணம்
கடவுளின்
படைப்பா?
உனது
பரபரப்பா?

நிதானமாக
உண்!
நினைவோடும்
கால அளவோடும்,
உண்!
நோயற்று,
உன்னதமாக
வாழ்!                                                                          - சுரேஜமீ

Dec 11, 2011

மகாகவி பிறந்த நாள்!

மகாகவி பிறந்த நாள்!

கம்பனும்
வள்ளுவனும்
இளங்கோவும்
கலந்து பேசி
தமிழ்த் தாயின்
முன்தோன்றி
ஒரு வரம்
வேண்டினர்!

தூங்கும்
தமிழினத்தை
துயிலெழுப்ப,
தூரிகையைத்
தட்டி எடு என்று!

தானே கருவாகி
தரணியில்
அவதரித்தாள்;
பாரதி எனும்
உருவெடுத்தாள்;
தமிழென்னும்
அமுது படைத்தாள்;
குயில்கூடத் தமிழ்
பாடியது,
அவன் குரல் கேட்டு!
மரம், செடி, கொடிகளெல்லாம்
இசை பாடியது
அவன் தமிழ் "பா" க்கு!
தமிழன் தலை
நிமிர்ந்தான்!
தரணியில் இனி
எவர்க்கும் யாம்
அடிமை இல்லையென்று!

அந்நாள் இந்நாள்!
அவதாரத் திருநாள்!

வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!                      - சுரேஜமீ