Jun 18, 2012

எங்கே செல்கிறது இந்தியா?

எங்கே செல்கிறது
இந்தியா?

மனிதமற்ற ஒரு
விலங்கு;
வீதியிலே
தன் காமப்பசிக்காக,
களியாடி இருக்கிறது
ஏழு வயதே நிரம்பிய
ஒரு அரும்பை;
பெங்களூருவில்!

மானுடம் செத்துவிட்ட
இந்த மண்ணிலே;
மதமும்; சாதியும்;
வறுமையும்;
மக்களின் குருதி குடிக்க;
காமப் பிராணிகளும்
களியாட்டம் போடுது காண்!

ஏ இரக்கமற்ற சமுதாயமே!
எங்கே உன் இதயம்?
இதயத்தை தொலைத்தவரெல்லாம்
இந்தியாவை நோக்கி 
வரும் வேளை;
எங்கே செல்கிறது
இந்தியா?                                                      - சுரேஜமீ  

The body of a seven-year-old girl, who was allegedly raped on Saturday night, was found in the Nellurhalli lake near Whitefield on the outskirts of the city on Sunday morning.
The police said that the girl had been raped allegedly by her father Basavaraju's acquaintance, Nagaraj, 28, a helper at a private workshop in Nellurhalli.
The victim's grieving mother, Mahadevi, said that the girl, a student of a government school, had gone to the Mariyamma temple near their house around 9 p.m. on Saturday after her dinner to collect the temple prasadam.
It was then that she met Nagaraj, who offered her biscuits and sweets, took her to a location near the lake and allegedly raped her.

Jun 14, 2012

யார் குடியரசுத் தலைவர்? (Who is the next President?)

ஒவ்வொரு இந்தியனும்
வெவ்வேறு இதழ்களையும்;
ஊடகங்களையும்;
உன்னிப்பாய் கவனிக்கிறான்!
ஆனால் சிந்தனைத் தெளிவில்லை,
யார் குடியரசுத் தலைவரென்று?

எவரும் அரியணையில்
அவதரிக்க அது என்ன
சித்திரக்கூடமா?
சிந்திக்கும் மாடமல்லவா!!
அரசியல் சதுரங்கத்தில்
காய்கள் நகரத் தொடங்கின....
விழிகளில்லாத வீணர்கள்
வழி செல்லும் எதுவும்,
மழையினில் காயவைத்த
மாவுக்கு ஒப்பாகும்!!!

யார் வேண்டும் என்று
பேர் கேட்டால் இந்தியன்
சட்டென சொல்லுவான்;

அரசியல் அற்றவன்;
அயலாரும் மெச்சுபவன்;
அகிலம் போற்றவே
ஆட்சிக்கு மாண்பு சேர்ப்பவன்;
சட்டம் தெரிந்தவன்;
சுற்றம் அறிந்தவன்;
சுயலாபம் அடையாதவன்;
சுளிவுகள் தெரிந்தவன்;
லட்சியக் கனவுடையோன்;
அலட்சியம் செய்யாதவன்;
எப்பொழுதும் இந்தியாவின்
ஏற்றத்தில் எண்ணத்தை;
சொல்லை; செயலை;
சிந்தாமல்; சிதறாமல்;
செப்பியது தவறாமல்;
செழுமையுடன் வழி நடத்தும்;
சிந்தனை ஒன்றுடையான்;
எந்தனை ஆளவேண்டும்;
எட்டு திக்கும் 
வாழவேண்டும்!

எவன் அவனோ;
அவன்தான் என்
தலைமகன்!!!
மெல்ல நகரட்டும்
நாட்கள்; 
நாமும் காத்திருப்போம்
இத்தகுதி உடையவர்
யாரென்று?                                           - சுரேஜமீ 

தமிழன் வீழாது இருக்க ஒரே வழி, தன் மொழி தாழாது இருக்க முனைவது தான்!

Jun 12, 2012

மணிமேகலை முருகேசன்


கூடல் நகரத்தின்
தேடல் தந்த
தங்கப் பெண்தான்
மணிமேகலை முருகேசன்
எனும் புதுமைப்பெண்!

கட்டுபாட்டுக்கு பெயர்போன
காவல்துறை அதிகாரியின்
அருந்தவப் புதல்வி
அன்னை இந்தியாவின்
பெருமை சாற்றும்
பேராற்றல் மிக்க
எளிமை உருவான
வலிமைப் பெண்!!

முதுகலை பட்டம் பெற்று
அயல்நாட்டுப் பணிக்கான
தேர்வில் முதல் முறையிலியே
வெற்றி பெற்று,
இந்தியாவின் முரசைப்
பறை சாற்றப்
புறப்பட்ட காரிகை!

ஐ.நா.தொடங்கி
அண்மையில் போருக்கு ஆளான
லிபியா வரையில்
ஆற்றிய சேவை
அளவில் அடங்கா!
ஆண்மகனும் தோற்றுவிடும்
போர்முனையில்
பார் போற்றும்,
பணியாற்றி இந்தியனின்
கண்ணீரைத் துடைத்த
தூரிகை!
தற்போது ரோமானிய;அல்பேனியா;
மற்றும் மோல்டோவா
நாட்டில் இந்தியாவின்
தூதுவர்!


இவர்தான் இந்த ஆண்டின்
பிரதமரின் ஆட்சிப்பணி 
விருதுக்காக அறுநூறு
போட்டியாளரில்
ஒருவராக தெரிந்தெடுக்கப் பட்ட
உயரிய பெண்மணி!
தமிழன் பெருமையை
தரணிக்கு பறை சாற்றும்
தலைமகள்!!

முட்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளை
மொட்டாக அரும்பி
எட்டு திக்கும் மணம்
பரப்பும் ஏற்றமிகு
சிந்தையாள்!!!
சீரோடும்; சிறப்போடும்;
நாள்தோறும்
வாழ்ந்திடவே வாழ்த்திடுவோம்
வாருங்கள்!!!                                           - சுரேஜமீ