அம்மா....அம்மா.....அம்மா....அம்மா.....
அருகிருந்து காப்பவளே என்தாயே நீயன்றி
யாருளர் எனைக்காக்க உனையல்லால் தாயே?
அகிலத்தில் நானுதிக்க காரணமான நீயே
அன்றாடம் பார்த்தென்னை ரட்சித் தருள்வாயே!
எங்கிருந்தோ வந்தெந்தன் எண்ணமெல்லாம் நிறைந்தாயே
ஏற்றம்தனைத் தந்தென்னை போற்றும்படி வைத்தாயே
உற்றதுணை என்றென்றும் தாய்போல் வருவாரோ
மற்றதுணை வெல்வதற்கு மாண்புகள் நீயன்றோ!
விடியலும் மடியலும் உன்இருவிழிப் பார்வையன்றோ
அடியனை ஆதரித்தல் உனகமுள சிந்தையன்றோ
ஆக்கலும் அழித்தலும் அகிலமமுன் செயலன்றோ
அன்னையே வழிநடத்தி காப்பதுந்தன் கடனன்றோ!
பேதங்கள் ஏதுமின்றி மண்ணில்வாழும் உயிர்க்கு
சேதங்கள் வருமுன்னே கதிரொளியாய் ஊடுருவி
உயிர்காக்கும் அன்னையே உனையன்றி யார்துணை
ஊழியும் போக்கிடுமே உன்பெருங்கருணை தாயே!
சரணம் சரணம் அம்மா....சரணம் சரணம் அம்மா!
அம்மா....அம்மா.....அம்மா....அம்மா.....