எம் தாயும்; எந்தையும்; தமிழும் தந்த கொடை நான்; என் நாவிருந்து ஆட்சி செய்து, எண்ணமெல்லாம் நிறைந்து, நினைத்தபோது தங்கு தடையின்றி என் வார்த்தைகளுக்கு வளம் கொடுக்கும் தமிழே, இங்கு வருவோர் அள்ள; அள்ளக் குறையாத, தீந்தமிழ் தேன் பருகி, தென்றலில் தவழ்ந்து, எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று, பாரினிலே பலர் மெச்ச வாழ்ந்திடுவர் நாளுமே! நண்பர்களே, நான் இலக்கணம் கற்றவன் அல்ல. புத்தகங்கள் படிப்பவனும் அல்ல; ஆதலால், சொற்பிழை, பொருட்பிழை இருப்பின் தயங்காமல் என்னை, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Mar 22, 2015
Mar 16, 2015
Mar 11, 2015
கோதையின் நாயகனே எங்கள்
கீதையின் திருமகனே என்றும்
அனுபவம் தரும் வழியில்
அறிவினைப் பெறுவதற்கு உன்
திருநாம மெனும் அந்தத்
தெவிட்டாத தேனெதற்கு?
கோகுலக் களியாட்டம் முதல்
பன்முக அரிதாரம் கொண்ட
பரந்தாமன் உனக் கென்றும்
அவனியில் மாந்தர் படும்
அல்லல்கள் புரியாதோ?
பிறப்பினில் ஏது குற்றம்
அறம் வளர்ப்பதில் மாறு
பட்டு பின் பட்டபின்
பாடம் கற்கும் நிலையினைக்
கொடுப்பதற்கு மண்ணில் எதற்க்கினிக்
கடவுளெனும் கேள்வி?
ஐவரை வைத்து நீயும்
அறத்தினை நாட்டி எங்கள்
குலத்தினைக் காப்பதற்கு நெறி
களத்தினை ஏற்படுத்தி எம்மதி
தனை எழுப்பி விட்ட
அந்தக் கண்ணனெங்கே?
யாவரும் வேண்டுவது உன்
மாபெரும் துணையன்றி வேறு
தேவையும் எமக்கில்லை இனி
தூயனற் சிந்தனையில் என்றும்
மாற்றவர் துயர் களையும்
மாண்பினைத் தருவாயா?
ஏடுகள் சொல்வதிலும் உள்ள
ஏற்றங்கள் தெளிவுடனே பற்றி
போற்றுதல் செய்து நல்ல
தேற்றுதல் பெற்று நாளும்
காலத்தை வென்றிடும் உன்
கருணையைப் புரிவாயா?
மாயத்திரை விலக்கி
மந்திரங்கள் சொல்வாயோ?
தவிக்கும் எம்முன்னே
தந்திரங்கள் தாராயோ?
கர்ம வினையென்னும்
கல்லினை அகற்றாயோ?
பாராமுக மிருந்தால்
பரந்தாமா உனையன்றி
பாரினில் யாருளர்?
- சுரேஜமீ
Subscribe to:
Posts (Atom)