2
விமானத்திலிருந்து
இறங்கி,
நுழைவு சீட்டை
சரிபார்த்து
குடியேற்று வாயிலைக்
கடக்கையில்
மகிழ்ச்சி
இரட்டிப்பாகிறது!
பயணத்தில் இடையூறு
ஏதுமில்லை எனும்
உறுதியால்;
நிசப்தமான
நிலைய அரங்கு;
கூட்டமில்லை;
முண்டியடித்து
யாரும் நிற்கவில்லை;
பரபரப்பு இல்லை;
சரக்கு தள்ளுவானை (trolley)
நோக்கி சென்று
எடுக்க முற்படுகிறேன்;
முடியவில்லை!
அப்போதுதான்
தெரிந்தது
இரண்டு ஈரோவைத்
தள்ளினால் தான்
சரக்கு தள்ளுவான்
வருமாம்!
என்வசமோ சில்லறை
இல்லை;
மாற்றும் வசதியும்
இல்லை;
கடன் அட்டை
இருந்ததால்;
கவலை இல்லை;
நேர்த்தியின் முதல் படி!
நீங்கள் சரக்கு
தள்ளுவானை
முறைப்படி அதற்குரிய
இடத்தில் சேர்த்தால்,
உங்கள் பணத்தை
திரும்ப பெறலாம்!
இதுதான்
"செய்வன திருந்தச்செய்"!
எனும் முதல் பாடம்!
நல்ல விஷயம் தானே?
நம் நாட்டிலும்
நடைமுறைப்
படுத்தலாமே!
படுத்தலாமே!
ஆனால் என் பணம்
திரும்ப கிடைக்கவில்லை!
என்ன ஆயிற்று
என் இரண்டு
ஈரோ? தொடரும் .....
No comments:
Post a Comment