Nov 16, 2011

கடவுள்

கடவுளைத் தேடி
அலையும் நீ
உன்னைக்
கடந்து,
உனக்குள்
ஏகி,
அலை பாயும்
மனதைத்
தாண்டி
தவம் செய்யும்
திடம்
பெற்றால்,
செம்புலப்பெயல்
நீர்போல
சிந்தையும்
செயலும்
ஒன்றாகும்!
உடலும்
உள்ளமும்
உறுதிபட
ஒளிரும்
சுடரே
அறிவாகும்!
கட உள்
நீ என்று
அறிவாயே!                                              -சுரேஜமீ