1
நவம்பர் 3 , 2011
இரவு
குவைத்
விமான நிலையம்
புறப்படுகிறோம்;
புதிதான சிந்தனைகள்
நெஞ்சினில் உலா வர
உல்லாசமாய் தொடங்கிற்று
நெடுநாளைய கனவு!
நள்ளிரவு,
துபையில்
ஊர்தி மாற்றம்;
ஜெர்மனி செல்லும்
ஊர்தி எங்களை
வரவேற்கிறது;
அமர்கிறோம்;
ஆனால்,
இமைகள் கண்களை
மூட மறுக்கிறது!
மூளை வண்ண வண்ண
கனவுகளை
படமாக்கி,
இதயத்தை
இதமாக்கி,
இன்பத்தை
பரப்ப,
நேரம் நகர்கிறது!
மீராவும், ஜனனியும் கூட
உறங்கவில்லை;
நவம்பர் 4 , 2011
விடியல்;
கதிரவனின்
ஒளிக்கீற்று
சற்றே படிந்திருக்க,
ஊர்தி பணியாளரின்
அறிவிப்பு!
Frankfurt நகரம்
நெருங்குகிறது
என்று!
கண்களும்
இதயமும் போட்டிபோட்டு
ஐரோப்பிய மண்ணை
நோக்குகின்றன!
அடுத்த
பத்தாவது நிமிடத்தில்,
பத்தாண்டுகளுக்கு
முன்னர் கண்ட
கனவு,
மெய்ப்படுகிறது!
ஆம்!
ஐரோப்பிய மண்ணில்
நாங்கள் கால்
பதித்து விட்டோம்!! தொடரும் .....
No comments:
Post a Comment