Dec 22, 2011

ஏசுவே எம் ஜீவனே!

இயேசுவை
மனமே
இதயத்தில்
இறுத்து,
இன்னல்கள்
விலகிடுமே!!

காசினில்
யாவும்
அன்பென்றும்
நிலைத்து,
காரிருள்
அகன்றிடுமே!!

போற்றுவோம்
இறையே
இயேசுவை நாமே!
நானிலம்
செழித்து,
நாற்பக்கம்
பகையும்
அழிந்திடவே!!

அன்பினைப் பேணு;
மாசினை அகற்று!
மகிழ்ச்சியைப்
பெருக்கி,
மாண்புடன்
வாழ்ந்திடவே!!

இயேசுவின்
வழியை
உறுதியாய்ப்
பற்று!
உயர்ந்திடுவாய்
மனமே!!

இயேசு
எம் ஜீவன்,
எமக்கில்லை
துயரம்,
மேய்ப்பனும்
அவனே
எனை மீட்பனும்
அவனேயாம்!!                                          -சுரேஜமீ 

No comments:

Post a Comment