Jun 12, 2012

மணிமேகலை முருகேசன்


கூடல் நகரத்தின்
தேடல் தந்த
தங்கப் பெண்தான்
மணிமேகலை முருகேசன்
எனும் புதுமைப்பெண்!

கட்டுபாட்டுக்கு பெயர்போன
காவல்துறை அதிகாரியின்
அருந்தவப் புதல்வி
அன்னை இந்தியாவின்
பெருமை சாற்றும்
பேராற்றல் மிக்க
எளிமை உருவான
வலிமைப் பெண்!!

முதுகலை பட்டம் பெற்று
அயல்நாட்டுப் பணிக்கான
தேர்வில் முதல் முறையிலியே
வெற்றி பெற்று,
இந்தியாவின் முரசைப்
பறை சாற்றப்
புறப்பட்ட காரிகை!

ஐ.நா.தொடங்கி
அண்மையில் போருக்கு ஆளான
லிபியா வரையில்
ஆற்றிய சேவை
அளவில் அடங்கா!
ஆண்மகனும் தோற்றுவிடும்
போர்முனையில்
பார் போற்றும்,
பணியாற்றி இந்தியனின்
கண்ணீரைத் துடைத்த
தூரிகை!
தற்போது ரோமானிய;அல்பேனியா;
மற்றும் மோல்டோவா
நாட்டில் இந்தியாவின்
தூதுவர்!


இவர்தான் இந்த ஆண்டின்
பிரதமரின் ஆட்சிப்பணி 
விருதுக்காக அறுநூறு
போட்டியாளரில்
ஒருவராக தெரிந்தெடுக்கப் பட்ட
உயரிய பெண்மணி!
தமிழன் பெருமையை
தரணிக்கு பறை சாற்றும்
தலைமகள்!!

முட்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளை
மொட்டாக அரும்பி
எட்டு திக்கும் மணம்
பரப்பும் ஏற்றமிகு
சிந்தையாள்!!!
சீரோடும்; சிறப்போடும்;
நாள்தோறும்
வாழ்ந்திடவே வாழ்த்திடுவோம்
வாருங்கள்!!!                                           - சுரேஜமீ

No comments:

Post a Comment