Jun 14, 2012

யார் குடியரசுத் தலைவர்? (Who is the next President?)

ஒவ்வொரு இந்தியனும்
வெவ்வேறு இதழ்களையும்;
ஊடகங்களையும்;
உன்னிப்பாய் கவனிக்கிறான்!
ஆனால் சிந்தனைத் தெளிவில்லை,
யார் குடியரசுத் தலைவரென்று?

எவரும் அரியணையில்
அவதரிக்க அது என்ன
சித்திரக்கூடமா?
சிந்திக்கும் மாடமல்லவா!!
அரசியல் சதுரங்கத்தில்
காய்கள் நகரத் தொடங்கின....
விழிகளில்லாத வீணர்கள்
வழி செல்லும் எதுவும்,
மழையினில் காயவைத்த
மாவுக்கு ஒப்பாகும்!!!

யார் வேண்டும் என்று
பேர் கேட்டால் இந்தியன்
சட்டென சொல்லுவான்;

அரசியல் அற்றவன்;
அயலாரும் மெச்சுபவன்;
அகிலம் போற்றவே
ஆட்சிக்கு மாண்பு சேர்ப்பவன்;
சட்டம் தெரிந்தவன்;
சுற்றம் அறிந்தவன்;
சுயலாபம் அடையாதவன்;
சுளிவுகள் தெரிந்தவன்;
லட்சியக் கனவுடையோன்;
அலட்சியம் செய்யாதவன்;
எப்பொழுதும் இந்தியாவின்
ஏற்றத்தில் எண்ணத்தை;
சொல்லை; செயலை;
சிந்தாமல்; சிதறாமல்;
செப்பியது தவறாமல்;
செழுமையுடன் வழி நடத்தும்;
சிந்தனை ஒன்றுடையான்;
எந்தனை ஆளவேண்டும்;
எட்டு திக்கும் 
வாழவேண்டும்!

எவன் அவனோ;
அவன்தான் என்
தலைமகன்!!!
மெல்ல நகரட்டும்
நாட்கள்; 
நாமும் காத்திருப்போம்
இத்தகுதி உடையவர்
யாரென்று?                                           - சுரேஜமீ 

தமிழன் வீழாது இருக்க ஒரே வழி, தன் மொழி தாழாது இருக்க முனைவது தான்!

No comments:

Post a Comment