ஒரு
புள்ளியை
கோலமாக்க
பத்து மாதம்
பரிதவித்த
பாசமலர்!
உயிரைக்
குறுக்கி
உதிரம்
பெருக்கி
உதரம்
செலுத்தி
உருவம்
கொடுத்த
உலகம்!
நொடியில்
பிறண்டு
அடுத்து
தவழ்ந்து
கணத்தில்
நடந்து
மழலை
பேச
மணியும்
பொறுக்கா
அன்பின் திறவுகோல்!
ஐந்தில்
வளைத்து
பத்தில்
உரைத்து
கல்வியின்
மேன்மை
கதைபல
கூறி
வளம்பட
வாழ
வழிவகைத்திட்ட
வள்ளல்!
இருபது
தொடங்கி
வருவது
எதுவோ
சுயக்கால்
நின்று
தெளிவுடன்
ஏறப் பழக்கிடும்
வழிகாட்டி!
மணமகள்
தேடி
மனைபல
ஏறி
குலமகள்
ஏற்றி
தன்னினம்
செழிக்க
தன்னலம்
மறக்கும்
தகைசார்
தெய்வம்! - சுரேஜமீ
No comments:
Post a Comment