Oct 2, 2011

மலர்ந்த காதல்!

வானும்
மண்ணும்
நோக்கின தன்
மலர்ந்த 
காதல் சொல்ல!
வானம் மெல்ல
அன்பை
மழையாய்ப்
பொழிந்தது!
மண்ணும் சற்றே 
நாணிப் பச்சைப்
போர்வை கொண்டு
தன்னை 
மறைத்தது!
மகிழ்ச்சி 
வானுக்கும்
மண்ணுக்கும் 
மட்டுமல்ல...
பூகோலமெங்கும்....
பயிர்ப்பன, 
பறப்பன, 
ஊர்வன, 
நடப்பன,
அனைத்தும் 
மகிழ்ந்தன.....                        - சுரேஜமீ

No comments:

Post a Comment