கணினி உலகின்
களத்தை
தன்னகத்தே
திருப்பி நம்
எல்லோரையும்
ஆப்பிள் என்ற
ஒரு சொல்லால்
ஆட்கொண்டவன்
இன்று ஆளாத்
துயரத்தில்
ஆழ்த்திவிட்டுச்
சென்றுவிட்டான்!
தோல்வியில்
தொடங்கி
வெற்றியைத்
தொட்டவனின்
வாழ்க்கை
கடைசியில்
தோற்றது
மரணத்திடம்!
ஐ உலகமோ
இன்று
ஐயோ உலகமானது!
சரித்திரத்தை
மாற்றியவனோ
ஒரு
சரித்திரம் ஆனான்!
ஐ பாடு தொடங்கி
ஐ போன் வரை
அலறும் சத்தம்
அகிலம் கேட்கிறது!
உருவாக்கிய நீயோ
ஆழ்ந்து உறங்கிவிட்டாய்!
மீண்டு வா!
மீள் சரித்திரமாக!! - சுரேஜமீ
No comments:
Post a Comment