Oct 20, 2011

அவசர யுகம்!!

பாதையில்
தொடர்ச்சியாக
வாகனங்கள்!
ஒன்றன் பின் 
ஒன்றாக,
சிறிதும் 
ஓசையின்றி
செல்கின்றன!
வளர்ந்த நாட்டில்!!

அடுத்த 
காட்சியில் 
களம் 
ஒன்றே!
ஆனால் 
காணல் வேறு!!

நாற்திசையும் 
ஓசை!
வாகனங்கள்
ஒன்றோடு
ஒன்று 
மோதும் நிலையில்!
இந்தியாவில்!
இன்னும் நாம்
வளரவில்லையோ?

அவசர கதியில்
செல்கின்றோம்;
அடிபட்ட பின்பே
தெளிகின்றோம்!!                              - சுரேஜமீ

No comments:

Post a Comment