Jan 17, 2012

தானே

வரலாறு
மீண்டும்
நினைவு படுத்தியது
தமிழினத்திற்கு 
1964 புயல் மற்றும்
2004 சுனாமியை
"தானே" யாக!

வெறும் புயல்
தானே என்று
இருந்த
எம் மக்களின்
வாழ்வாதாரத்தை
"தானே "
தாரை
வார்த்துக் கொண்டது,
தனக்குத்தானே!       

தவிக்கிறான்
தமிழன்!
இரு
தலைமுறையாகும்
இவ்விழப்பை
ஈடு செய்ய!
அதுவும்
அரசும்,
தொண்டு நிறுவனமும்,
தொழிலதிபர்களும்,
தன் கரத்தை
நீட்டினால்
மீண்டு வருவான்
மாண்டு போகாமல்!                                             - சுரேஜமீ

No comments:

Post a Comment