Jan 17, 2012

தற்காலத் தமிழன்

அறம் துறந்து
வரும்
ஆக்கம்,

பொய்யுரைத்துத்
தேடும்
புகழ்,

கண்ணியம்
தவறிக்
கிட்டும் பதவி,

நெறி கெட்டு
நடத்தும்
தலைமை,

சக மனிதன்
துயரம்
ஆற்றா
பண்பு,

இன்னும் பல
என்னும்
பட்டியல்
நீளும்
நாளும்..

தட்டிகேட்க
இயலாத
தற்காலத் 
தமிழன் மீது
விழுந்த சாபம்!                                                     - சுரேஜமீ

No comments:

Post a Comment