Oct 15, 2012

நவராத்திரி

நவராத்திரி 

நங்கையர்கள் நாவினிலே, 
நாமகளும் குடிகொண்டு, 
நவ நாள்கள் தேவிதனை ,
நாளெல்லாம் பூஜித்து; 

முதல் மூன்று நாட்களிலே 
மூவுலகைக் காப்பவளாம் 
துர்கையை வணங்கியே 
இச்சையைப் பெற்றிடுவர்!

அடுத்த மூன்று நாட்களிலே 
அரங்கனின் அருகிருக்கும் 
இலக்குமியை வணங்கி நாமே 
இன்பமெல்லாம் வேண்டிடுவர்!

கடைசி மூன்று நாட்களிலே 
காரிருளைப் போக்கிடுவாள் 
கலைமகளை வணங்கிடுவர்;
கற்ற கல்வி பெருகிடவே!

மனமாசு அகற்றிவிடும் 
மகிசாசுர மர்தினி சுலோகம் 
வேண்டுவன தந்திடுமே 
வெற்றிதனை உண்டாக்கும் 
லலிதா நவரத்னா மாலை 
இலட்சியத்தை அடைந்திடவே 
லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் 
லஹரியுடன்,அபிராமி அந்தாதி 
நித்தம் சொல்லி ஒரு மனதாய் 
நவராத்திரி நாட்களிலே 
நன்மையெல்லாம் பெற்றிடுவீர்!! 

மலைமகளும்; அலைமகளும் 
கலைமகளும் துணை நிற்பாள்;
துன்பமது வாராது;
இன்பமது நிலைத்திடுமே!!!

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!!!!!!!!!! - சுரேஜமீ 

(Wish you all a very HAAPY NAVARHTIRI!!!!)






No comments:

Post a Comment