Oct 30, 2012

லீனா மணிமேகலை

காற்றும் ஒளியும்
கண்கவர் வானும்
காதில் சொன்னது;
கலையும், கற்பனையும்;
கலந்த கலவை
மேகலை எனும் உருவில்
மண்ணில் உள்ளதென்று!
சற்றே யாரென சிந்தை
செலுத்தி; சிலவரி படித்தேன்;
உன் முகவரி தேடினேன்;
உன்னைப் போல் ஒவ்வொரு
பெண்ணும்; தெளிந்த நீரோடையாய்
திடமான சிந்தனையுடன்
தீர்க்கமான வழி பற்றினால்;
திண்ணமாய்ச் சொல்கிறேன்;
பாரதியும்; பெரியாரும்
இறந்து பிறக்கத் தேவையில்லை!
பிறந்து இறந்த பயன் பெற்றார்!
காமத்தை திணிக்கும்
காட்டு மிராண்டிகளுக்கிடையே
காகிதப் பூவின் மென்மையும்;
கள்ளிப் பூவின் தன்மையும்;
ரோசாவின் அழகையும்
ரோமின் உறுதியும்,
கொண்ட உன்போல்
பெண்களால்தான்
புது யுகம் படைக்கிறோம் !
தமிழே; தமிழச்சியே!
நீ வாழ்க; வளர்க!                             

No comments:

Post a Comment