May 10, 2015

அன்னையர் தினம்?

அன்னையர் தினம் என்று அன்னியன் வைக்கின்றான்;
அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்!
அன்னைக்கு ஏதொரு தினம்?
அனுதினமும் அவள்தினம்தான்!

அன்னை தந்தை வளர்த்தெடுத்தார்
அவனியில் நாம் மகிழ்கின்றோம்!
அவர்தம்மை பிரிந்திருத்தல்
நாம் செய்த பாவமன்றோ!
அவர்தம்மை பார்த்திருத்தல்
அன்னவரின் பெருமையன்றோ!
அதுகிடைக்கா எதுகிடைத்தும்
அருளில்லை இவ்வுலகில்!
பெற்றவரைப் போற்றிடுவர்
பேரெல்லாம் பெற்றிடுவர்
பெருமைபட வாழ்ந்திடுவர்
பெருகிவரும் செல்வமெலாம்!
வாழ்த்துதற்கு நாமென்ன வானவரா?
வணங்கிடுங்கள் தெய்வமதை
வளர்நாளும் வரலாறாய்
வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!!

- சுரேஜமீ

No comments:

Post a Comment