May 12, 2015

வள்ளுவ மாலை


திருக்குறள் ஓதுவீர் ஓங்கும் புகழெய்த
ஓடும் மனதிற்குப் போடும் கடிவாளம் 
தேடும் அறிவிற்கோர் ஏற்றம் - வருமொரு
தீதும் அகற்றிடும் நூல்!

நூல்பல தேடிப் படித்தாலும் வாரா
தெளிதமிழ் சிந்தனை ஏகும் - திருக்குறள்
வாழ்வில் தரும்நலம் யாவும்! - அதன்வழி
​நில்​
மானுடம் போற்ற சிறந்து!

வெல்லும் செயல்யாவும் சொல்லும் வழிநி
​ற்க
உள்ளும் புறமும் தீதறுநல் லின்பமும்
​​
மாற்றானும் வாழ்த்திட நாளும் - பெருகிடும்
மாண்பும் திருக்குறள் பண்பு!

நீடில்லா வாழ்சேர் நிலமும் - ஆக்கும்
நிதம்பல செல்வமும் யார்கொண்டு செல்வர்?
தகுமென வாழா மனத்தினன்- தெய்வத்
திருக்குறள் ஓதல் சுகம்!

நானென் செயவென நோகாமல் நாளும்
நவில்வாய் திருக்குற ளொன்றை - அதுதரும்
நன்னெறி பற்றிடத் தெருவோர் போற்றும்
நாயகன் நீயாவாய் நம்பு!


அன்புடன்
சுரேஜமீ​​

No comments:

Post a Comment