Nov 1, 2012

ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!

ஒருநாளும் உன்னை வணங்கும் உத்தமன் நானல்லவே,
இருந்தாலும் எனைக் காக்கும் பரம்பொருள் நீயல்லவா!!

காஞ்சி நகர் வாழும் கருணை உள்ளமே உனைக்
காண்பவர் கரை சேர்வர்; ஊழிப்  பெருங்கடலை
எண்ணக்குவி சேர்ப்பார்; உன் திருநாமம் சொல்லி,
தின்னக்  கூலி உண்டோ? தெவிட்டாத உன்னருளை !  (ஒரு நாளும்)

கடவுளை நானிங்கு கண்டதில்லை உன்னைக்
கண்ட நாள் முதலாய் கடவுளில்லை;
உற்றார், பெற்றாரும் உறவுமில்லை; என்றும்
உன்னடி சேர்ந்தார்க்கு அனைத்தும் நீயே !        (ஒரு நாளும்)

ஆசை எனும் தேரில் ஏறிவிட்டேன்;
மாயை எனும் வலையில் வீழ்ந்து விட்டேன்;
இன்பம் எனும் தூண்டில் கொணர்ந்த இந்த
துன்பச் சுமை தாங்கா, துடிக்கின்றேன்!                (ஒரு நாளும்)


அற்ப வாழ்வினை, நீ அற்புதமாய் மாற்றி
அடியேன் எனை நீயும் ஆதரிப்பாய்;
இனியும் வாழ்நாளில், பிறர்க்கின்னா செய்யாமை
எனைக் காத்து, வாழ்வில் ஒளியேற்றும் என் தெய்வமே!!

ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!

ஒருநாளும் உன்னை வணங்கும் உத்தமன் நானல்லவே
இருந்தாலும் எனைக் காக்கும் பரம்பொருள் நீயல்லவா!!!                 -  சுரேஜமீ

No comments:

Post a Comment