Aug 15, 2011

65-வது சுதந்திர தினம்!



இந்திய விடுதலை
இன்று அகவை அறுபத்து நான்கு கடந்து
அறுபத்து ஐந்தில் அடியெடுத்து வைக்கும் வேளை
நாம் செய்த சாதனைகள் 
நமை காட்டும் அடையாளம்!


உலக வரைபடத்தின் ஒரு பகுதி
இன்று உலகையே
வரையும் படம் என்றால்
அதுதான் நாம் தரும் செய்தி
இந்த உலகத்துக்கு!


மக்களாட்சி முறைக்கு ஒரு
மகத்தான மேற்கோளாய்
மேற்கத்திய நாடுகளே
இந்தியா தானென்று
இறுதியிட்டு கூறுவது
இந்தியனின் பெருமையன்றோ!


பட்டினி சாவினின்று
பரிதவிக்கும் மக்களின்
பசிப்பிணியை
போக்கிட்ட  ஒரு
பசுமை புரட்சி!


அந்நியர் வந்து இங்கு
தொழில் தொடங்கும்
காலம் போய்
அந்நிய நாட்டினிலும்
இந்தியர்கள்
தொழில் செய்யும் காலமிது!


பெண்ணீயம் என்பது
வெறும் ஏட்டில் மட்டுமன்றி
நாற்திசையும் இன்று
நம் பெண்மணிகளின்
சாதனையை நாடறியும் நன்றே!


கல்வியில் நாம் தொட்ட
களமின்று
கணினியுகம் பறைசாற்றும்!
உலக பொருளாதாரம் சற்றே
மந்தமாக,
இந்திய பொருளாதார ஏற்றத்தின்
உச்சி சொல்லும் நம் கல்வியின் மாற்றத்தை!


வானத்தின் எல்லை
எட்டாதோ என்று
எண்ணிய காலமின்றி
எண்ணிலடங்க செயற்கைக்கோள்
விண்ணிளின்று பறக்குது காண்!


வெள்ளையர்கள் விளையாட்டம்
கிரிக்கெட்டில்
இதுவரை நாம்
இரண்டு முறை பட்டம் வென்றோம்
இளைஞர்களின் சக்தியது!


எத்தனை மொழிகள் இங்கே,
எத்தனை மதங்கள் இங்கே
அத்தனை இருந்தபோதும்
இந்தியன் என்ற சொல்லே
எம்மை உவகை கொள்ளசெய்யும்
என்றில் ஐயமும் உண்டோ சொல்!


இத்தனை கண்டுவிட்டோம்
இனி என்ன செய்யவென்று
சோம்பி இராமல்
இந்தியனே புறப்படு ஒரு
புதிய பாரதம் படைத்திட!
அன்றை நாள் உலகினில்
உன்னாடே வல்லரசு!                                                -சுரேஜமீ

No comments:

Post a Comment