காவல், கடுங்காவல்,
கால அளவுகள்,
ஆயுள் தண்டனை,
இரட்டை ஆயுள் தண்டனை,
இவை எல்லாம் குற்றம்
செய்தவனைத் திருத்த
சட்டம் செய்யும் முயற்சி!
நிச்சயமாக சுயஅறிவு
உள்ள எவனும்
திருந்துவதற்கு
ஒரு வாய்ப்புதான்
தண்டனை!
ஆனால்,
சட்டம்
வாய்ப்பே
வழங்காத ஒரு
தண்டனை
மரண
தண்டனை!
மனிதம் மாண்டுபோனது
மரண தண்டனையால்!
நாளைய
விடியலே
நம்பிக்கையில்தானே?
இந்நிலையில்
சட்டம் மட்டும்
ஏன் நம்பிக்கை
இழந்தது
மரண தண்டனைக்
குற்றவாளி திருந்த மாட்டனென்று? - சுரேஜமீ
Nitharsanamana unmai anna..
ReplyDelete