முல்லைக்கு தேர் கொடுத்த
பாரி!
பறவைக்கு தன் உடல் கொடுத்த
சிபி சக்ரவர்த்தி!
வாடிய பயிரைக் கண்டபோதெலாம்
வாடிய பயிரைக் கண்டபோதெலாம்
வாடிய வள்ளலார்!
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த உலகத்தை அழித்திடிவோம் என்ற பாரதி!
இவர்களெல்லாம் வாழ்ந்த இந்நாட்டில்
இன்று நடப்பது என்ன?
முதியோர் இல்லத்துக்கு
பெற்றோரை அனுப்பும் பிள்ளைகள்!
பிறந்த குழந்தையைத்
தொட்டியில் எறியும் தாய்!
பக்கத்துக்கு வீட்டில் நடக்கும்
பாதகத்தை வேடிக்கை பார்க்கும்
அவல மனிதர்கள்!
காவலர் எதிரிலேயே
காணும் கொலைகள்!
போக்குவரத்து நெரிசலில்
காத்துநிற்கும் உயிர்காக்கும்
வாகனங்கள்!
ஏ மனிதநேயமே!
எங்கே சென்றாய்?
உலகுக்கே பறைசாற்றிய
என் இனம் இன்று
ஊனமாய் நிற்கிறது
உனை இழந்து!
மீண்டு வா! மீண்டு வா!
மானுடம் வாழ! -சுரேஜமீ
Great nice one.
ReplyDeletegreat, nice one
ReplyDelete