Aug 17, 2011

அன்னா ஹசாரே!

இந்தியாவின் இந்நாள்
தலைப்பு செய்தி!

அரசாங்கத்தை அதிரவைக்கும்
ஆற்றல்மிகு காந்தியவாதி!
இந்தியனின்
ஈடில்லா பிரதிபலிப்பு!
உண்மையான லோக்பால் வேண்டி
ஊழலற்ற இந்தியாவிற்காக
எட்டு திக்கும் மக்களை திரட்டி
ஏடுகளின் பக்கத்தை நிரப்பும்
ஐயமற்ற அன்னாவின் உண்ணாவிரதம்!
ஒடுக்க நினைத்த அரசை எதிர்த்து 
ஓங்கி ஒலிக்கும் குரல்கள் எங்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் 
தாயின் மணிக்கொடி 
தன்தலையை சற்றே 
தாழ்த்திக்கொண்டது 
தன் மக்கள் படும்பாடு கண்டு!

என்ன கேட்டார் அன்னா?
மக்கள் தேர்ந்தெடுத்த மன்னன்
மக்கள்முன் நிற்க 
மௌனிப்பானேன்?                            - சுரேஜமீ

No comments:

Post a Comment