தன்மீது நம்பிக்கை
இழந்தவன்
தமிழகராதிக்கு
கொடுத்த கொடைச் சொல்!
உணர்ச்சிகளை
கொச்சைப்படுத்திய
கோழையின் முடிவை
விளிக்கும் சொல்!
அமாவாசையன்று
நிலவைத் தேடி
இனி நிலவே வானில்
வராதென்று நினைத்த
முட்டாளின் முடிவுரை! -சுரேஜமீ
No comments:
Post a Comment