காஞ்சியின் காலடியே
உன் காலடி பற்றினோம்
காத்தருள் பரமகுரு!
கலியுகக் கடவுளே
கருணையின் திருவுருவே
தினம் எமை வாழ்த்திட
உன் திருவடி சரணமே!
எமை மறந்து
யாம் செய்த எத்தனை
குற்றங்கள்!
பொருத்தருள் பரமகுரு
உன் பொற்பதம்
பணிந்திட்டோம்!
புவியினில்
இருக்குங்கால் உன்
திருநாமம் தொழுகவே
தினம் எமைப் பணித்திடு
தெய்வமே எம் நாதா!
காலையின் கதிரும் நீ!
மாலையின் மதியும் நீ!
வருடும் காற்றும் நீ!
வாழ்க்கையின்
வசந்தம் நீ!!
பிறந்திட்ட அனைவரும்
பெருமகிழ்ச்சி பெற்றிடவே
பெருமகனே அருள்வாயே
பேரருளை நித்தமுமே!
சரணம் எம் குரு!
சரணம் எம் குரு!! - சுரேஜமீ
No comments:
Post a Comment