மன்னன்
மகாபலி
தன்
ஆட்சியின்
மதிப்பீடு அறிய
மக்களை நாடி
வந்த அற்றைத்
திருநாளே
திருவோணம்!
இந்நாளில்
இனிய வாழ்த்து
பரிமாறி
புத்தாடை உடுத்தி
பூக்கோலம் இட்டு
பாடி, ஆடிக்
கொண்டாடும்
இந்த
அத்தம் பத்தினும்
திருவோணத்
திருவிழா!
மலர்களும்
மனங்களும்
இணைந்து
மெல்லிய
மனம் வீசும்
தென்றல்
தவழும்
இந்நாளில்
எங்கும்
மகிழ்ச்சி பரவட்டும்!! - சுரேஜமீ
இனிய ஓணம் வாழ்த்துக்கள் நண்பர்களே!!
No comments:
Post a Comment