Sep 8, 2011

அரசியல்!

அரசியல் பிழைத்தோர்க்கு
அறமே கூற்றாகும் 
என்றது சிலப்பதிகாரம்!
ஆனால் இன்று 
நடப்பதோ
குற்றம்,கொலை,
கொள்ளை, அபகரிப்பு, 
வஞ்சனை, சூழ்ச்சி,  
அபரிமித செல்வம்,
ஆட்படை , அரசாட்சி 
வேண்டுவோர்க்கு
அரசியலே பிழைப்பாக
இருக்கிறது!

ஊக்கம் தராத
ஆக்கத்தை
அரசியல் தரும்
என்பதை
ஐயன் திருவள்ளுவர்
திருத்தி எழுதியிருப்பார்
இற்றை நாளில்
இருந்தால்!                                                        - சுரேஜமீ

No comments:

Post a Comment