Sep 6, 2011

நட்பு!

உறவு
உதறிய
உணர்வுகளை
உள்ளன்போடு
உறுதியாய் ஏற்கும் 
நட்பு!

வாழ்க்கையின்
ஏற்ற தாழ்வுகளில்
தாமரையின் வேரும்
நீரும் போல 
ஒட்டியிருக்கும் 
நட்பு!

தயக்கம் சிறிதும்
இன்றி தான் 
நினைத்ததை 
கூறும்போது அதன் 
நிறை குறை அலசும் 
நட்பு!

பள்ளத்தை நோக்கி
ஓடும் நீர்போல
வாழ்க்கை 
பயணத்தில்
தொடரும் 
நட்பு!

இப்படி ஒரு
நட்பு
வாய்த்தால்
வாழ்க்கை
என்றும் வசந்தமே!                             - சுரேஜமீ

No comments:

Post a Comment