Sep 21, 2011

பெண்ணே நீ ஒரு அதிசயம்!

பெண்ணே 
நீ ஒரு
அதிசயம்!

அறியாத 
வயதில் 
தாயாய்
உன் அன்பில்
நான்
உலகத்தை
பார்த்தேன்!
என் பூமி
உன்னைச்
சுற்றி வந்தது!

அறிந்தும் 
அறியாத 
வயதில்
நீ தொலைவில்
நின்றால்
ரசிக்கத்
தோன்றும்!
அருகில் 
வந்தால்
அணைக்கத்
தோன்றும்!
காதல் என்று
காலம் 
சொன்னது!
காமம் என்று
பருவம் சொன்னது!
ஆனால் 
அது ஒரு
ஈர்ப்பென்றேன்!

அறிந்த வயதில்
அனுபவம்
சொன்னது! 
பெண்ணே 
நீயல்லால்
இப்புவி
என்றோ
ஒரு 
போர்க்களம் 
ஆயிருக்குமென்று!

ஏனெனில்
நீ தானே 
போரைத்
தொடுப்பதும்
போரைத் (bore)
தடுப்பதும்?

பெண்ணே 
நீ ஒரு 
அதிசயம்!

அகிலம் 
இயங்குவதே 
உன் அன்பு
என்னும்
தாய்மை!
பாசம்!
மென்மை!
மேன்மை!
காதல்!
கனிவு!
பண்பு!
பகிர்வு!
பரிவு!
ஆளுமை!
தோழமை!
அகிலம்!
அனைத்தும்!                                                    - சுரேஜமீ

No comments:

Post a Comment