காலையில் ஒரு
கலை விழா
கலாச்சாரம்
வீழாது இருக்க
குவைத் சின்மயா
குழுவின்
கவின் விழா!அரும்பிய
மலர்களின்
அற்புத நடனம்
ஆண்டவனின்
ஆனந்தத் தாண்டவமோ
எனக் காண்பவர்
மனதில் களிப்பினை
உண்டாக்கிய
ஒரு விழா!
சிறார்களின்
சீரிய பங்களிப்பும்
சேவிகாக்களின்
சிந்தனை வடிவும்
பெற்றவர், உற்றவர்,
மற்றவர்களின்
வாழ்த்தும்
குருவின் ஆசியும்
நேர்த்தியாய்
நேரத்தை நகர்த்தின
இனி எப்போது
இதுபோல் ஒரு
விழா வருமென? - சுரேஜமீ
(செப்டம்பர் 16 , 2011 )
No comments:
Post a Comment