நீரின்றி அமையாது
உலகென்றான்!
எழுத்தறிவித்தவன்
இல்லையெனில்
ஏது
உலகு?
ஐந்து வயதில்
அன்னை தந்தையே
உலகாய் இருந்த
எனக்கு கிடைத்த
அறிவுலகே
என் ஆசான்!
அன்று ஏற்றிவைத்த
தீபம் இன்றும்
இன்னும் பலப்பல
ஆண்டுகள்
எரிகிறது என்றால்
நீயே என் இறைவன் அன்றோ?
இருபது வருடங்கள்
என் அறிவுக்கு
இரை கொடுத்த
அத்துணை
ஆசான்களுக்கும்
அடியேனின்
சிரம்தாழ்ந்த
வணக்கங்கள் பல! - சுரேஜமீ
(ஆசிரியர் தினம்)
No comments:
Post a Comment