தன்மகன் போருக்கு
புறமுதுகிட்டான் எனில்
தன் கொங்கை அறுத்த
தம் நாட்டில்
நீதி கிடைக்காதோ
என்று மனம் வெதும்பித்
தன்னை மாய்த்தால்
தன்சமூகம்
விழிப்புற்று வீதிக்கு வந்து
போராடி மூவருயிர்
காக்கும் என்று
வீழ்ந்தாள்
வெந்தணலில்
ஒரு பைங்கொடி
அவள் பெயர்
செங்கொடி!
வாழவேண்டிய
வயதில்
வாழ்க்கையைத்
தொலைத்தவள்!
இனக்கொடி காக்க
இன்னுயிர் ஈத்த
நீயும் ஒரு தாயே! - சுரேஜமீ
No comments:
Post a Comment