Dec 13, 2012

புதுக்குறள் - 11

புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

கல்வியைத் தேடித்தனி யார்முன் போவானேன்
கருத்தா லரசுசெய்யுங் கால்.

விளக்கம்:

அரசாங்கம் நல்ல தரமான கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தால், தனியார் கல்விக் கூடங்களுக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது.  இந்த அவலநிலை மாற, ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment