Dec 24, 2012

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

உலகமறியாத சிறுபிள்ளை நான்
உன்னைச் சேர்ந்திட்ட ஒருபிள்ளை தான்
என்னைக் கரைசேரும் குருவல்லவா
ஏதுமறியாயோ என்குருநாத கேள்;

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

அன்புசெய்கின்றேன் உலகத்திலே அந்த
அன்பே அறியாதோர் பலரிருக்க இங்கு
அன்பே தவமென்று அறிவுறுத்தும் உன்
அன்பால் நிலைக்கின்றேன் நானென்றுமே!

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

வஞ்சம் சூழ்ச்சியோடு வாவென்ற ழைகின்றார்
கொஞ்சும் மழழையாய் தவிக்கின் றேனுந்தன் 
தஞ்சமன்றி யுயிர்காக்க எவருளர் இவ்வுலகத்தில்
நெஞ்சம்வந்து எனைக்காத்திடவே வருவாய்!

உலகமறியாத சிறுபிள்ளை நான்!


எண்ணக்கலத்தி லுந்தன்நாம மன்றியேது மறிகிலேனே 
வண்ணக்கோல மல்லவாழ்க்கை என்றுணர்ந்தே நின்னைச் 
சரணடைந்தே னெந்தன்பிழை பொறுத்துக் காத்திடப்பா
கருணாகர மூர்த்திகடைக் கண்ணாலே பார்த்திடப்பா....

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

No comments:

Post a Comment