Dec 19, 2012

ஜகத்தினையே வென்றிடலாம்!

உன் திருநாமமல்லால் வேறேதுமில்லை இங்கே
என் மனவேண்டுதல் கேட்டருள குருநாதா
இப்பிறவியில் யான்செய்த பாவமேது தெரியாதே
எப்பிறவியிலும் உந்தன் பாதமே சரணமய்யா!

காஞ்சிநகர் அலங்கரிக்கும் காமகோடி பீடமது
வாஞ்சையுடன் வருவோரை வரவேற்கும் பீடமது
என்னகுறை சொல்லுமுன்னே தீர்க்குமொரு பீடமது
மன்னவராய் வீற்றிருக்கும் மகானுறை பீடமது

மதங்களைத் தாண்டிவரும் மக்களைக் கண்டிடுவீர்
மகாபெரியவ தரிசனத்திற்கு ஏங்குகின்ற கூட்டமது
புண்ணியங்கள் சேர்த்திடுவார் கருணாகர முகம்பார்த்து
எண்ணியவை கிட்டிவிட்ட மகிழ்ச்சியிலே திளைத்திடுவர்

இறையருளும் குருவருளும் நிறைந்தந்த இடந்தனிலே
மறைகளுமே ஓதுகின்ற மங்களங்கள் முழங்குகின்ற
வானவரும் வாழ்த்துகின்ற வளங்களெல்லாம் தருகின்ற
என்னருமை இடமாமே காஞ்சிநகர் சென்றிடுவோம்!!

ஜகத்குருவை கண்டிடலாம்! ஜகத்தினையே வென்றிடலாம்!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!

No comments:

Post a Comment