கனெக்டிக்கட் (Connecticut, US) டில் நடந்த
கொடுமை இது!
பலிகடாவாகி இருக்கின்றன....
பாவியின் கைகளில்
பாவியின் கைகளில்
பதைக்க வைக்கும் துப்பாக்கி
மனித உரிமைகள் பேசும்
மண்ணில் மாண்டுபோன
மழழைகள்!
தன்னிலை மறந்த ஒருவன்
தாயையும் கொன்று
தனயனையும் கொன்று
தானும் மாண்டுள்ளான்?
இரத்தபந்தம் அறியாதவன்
இரத்தத்தை குடித்து
இருக்கிறான்!
இதயம் துடிக்கிறது;
இளம்பிஞ்சுகளை நினைத்து!
என்ன பாவம் செய்தன?
எவனோ ஒருவன் சட்டெனச்
சுடுவதற்கு?
குடும்ப உறவுகளின்
மகத்துவம் அறிந்திருந்தால்
குருதி சிந்தி இருக்காது!
அன்னையின் அரவணைப்பும்
தந்தையின் அறிவணைப்பும்
சுற்றங்களின் சூழணைப்பும்
சரியாக அமையாதவனால்
ஏற்படும் பேரழிவிற்கு
எடுத்துக்காட்டு இச்சம்பவம்!
அரும்புகளின் பெற்றோரே
ஆறுதலற்று நிற்கின்ற,
உங்களை எப்படிச் சொல்லித்
தேற்றுவது?
எல்லோருக்கும் விடிந்தது
இவர்களுக்கு இடிந்தது.....
இறைவா,
இந்த பெற்றோருக்கு
இதயத்தில் பலத்தையும்
இனியொரு வாழ்க்கைக்கு
வளத்தையும் கொடு!!!
ஆழ்மனதிலிருந்து வரும்
ஆற்றாத துயரத்தை
விழிகளின் நீராக
விதைப்பதைத் தவிர,
யான் வேறொன்றும் அறிகிலேன்!
என் அஞ்சலியைச் செலுத்த
இந்த இளந்தளிர்களுக்கு!!!
No comments:
Post a Comment