Dec 19, 2012

மந்திரத்தை எமக்களியும்!

மனமென்னும் எந்திரத்தை
மாத்திரத்தில் இயக்குமந்த
மந்திரத்தை எமக்களியும்
மன்றாடிக் கேட்கின்றோம்!

உருவெடுக்கும் சிந்தையெல்லாம்
உயர்வான பொருளாம்
உன்னெறி பற்றும்
உருப்பெற்று நற்கதியருளட்டும்!!

ஜோதியிலே சேர்ந்தஒளி
காணுதற்கு அரியதொன்று
ஆதியந்தம் அற்றதது
ஆனந்தம் அளித்திடுமே!!!

வேண்டுவது கொடுத்திடுவாய்
வேண்டுமந்த மாந்தருக்கே
போதுமென்ற மனமென்றும்
பூரிப்பாய் வாழ்ந்திடவே!!!!

No comments:

Post a Comment