வங்கத்தின் ஓடி வந்த
இசையின் மிகையால்
மையத்துநாடு மட்டுமல்லால்
எங்கெங்கு காற்று புகுமோ
அங்கெல்லாம் பரவியது
உன் இசையென்னும் இனிய ராகம்.....
பண்ணும் இசையெல்லாம்
மின்னும் உன் கரம் பட்டால்;
சிதார் உன் கரங்களால்
கிறங்கடித்த உள்ளங்கள்
இன்று சிந்தை கலங்கி
இருக்கின்றன.....
இறப்பே உன் இருப்பை
உறுதி செய்ய
வீணையை விண்ணுக்கு
அழைத்தாயோ?
இந்த மண்ணில்
இசைகேட்கும் மனிதன்
இருக்கும்வரை
பண்டிட் ரவிசங்கர்ஜி
பல்லாண்டு வாழ்ந்திடுவார்!
பலரும் அவர் புகழ் பாட!!
No comments:
Post a Comment