Dec 24, 2012

"ஓம் நமோ நாராயணா"


அரங்கன் வாழுகின்ற ரங்கமே 
திருவரங்கன் வாழுகின்ற திருவரங்கமே 
தினமும் தொழுவோர்க்குத் திருவருள் தரும் 
அரங்கன் வாழுகின்ற ரங்கமே!

ஏகாதசியன்று விரதமிருந்து  ஒருமனதோ டவன் 
எட்டெழுத்து மந்திரமாம் "ஓம் நமோ நாராயணா" என 
ஓதுமன் பருக்கே வேண்டுவன வழங்கிடுவான் 
ஒன்று மறியாத குழந்தைபோல் நின்றிடுவான்!

நாலாறு ஏகாதசி விரதத்தின் மகிமையினை 
ஒருநாள் ஏகாதசி தருமந்தத் திருநாளாம் 
வைகுண்ட ஏகாதசி நன்னாளா மின்று 
வைகுந்தன் தரிசனமே கண்டிடுவார்! 

வாமன னருள்வேண்டு மாந்தரும்  பெற்றிடுவார் 
வானவர் போற்றிடுமென் பரந்தாமனின் பாதமே 
பரமபத வாசலில் நின்றிடுவ ரந்தரன்கனின் 
தரிசனத்தைக் கண்டிடவே இந்நாளில் அரங்கத்திலே!

அரங்கன் வாழுகின்ற ரங்கமே 
திருவரங்கன் வாழுகின்ற திருவரங்கமே 
தினமும் தொழுவோர்க்குத் திருவருள் தரும் 
அரங்கன் வாழுகின்ற ரங்கமே!

No comments:

Post a Comment