Dec 11, 2012

M S

M S
இந்த இரண்டெழுத்து
இதயங்களை வருடாத
நாட்களே இல்லை...

குயிலும் தமிழும்
செய்த தவம்;
ஒரு இசைக் குயிலாக
ஒவ்வொரு இந்தியனையும்
கட்டிபோட்ட குரல்!

ஆலயங்களில்....
ஆண்டவன் சந்நிதியில்,
திருப்பள்ளி எழுச்சியே....
திருமகளின் குரல் தான்
என்றால் மிகையாகாது.....

எத்தனை எத்தனை
கீர்த்தனைகள்...
தெய்வீக கானங்கள்...
தேவ மந்திரங்கள் .....
உன் குரலால்
உச்சரிக்கப்பட்டு
உயிர் பெற்றன.....

நீ
குறை ஒன்றும் இல்லை பாடினால்
குதூகலித்து வருவான் வேங்கடன்.
உன் சுப்ரபாதத்தில் தான் இன்றும்
துயிழெழுகிறான் அந்த அரங்கன்!

நீயோ நீங்காத்துயில் கொண்ட நாள் இது!
(இன்று M S நினைவு நாள்)

No comments:

Post a Comment