Apr 12, 2015

காணல் தரும் சேதி என்ன?
காலம் தந்த சேதிதானே
நானும்; நீயும் இங்கே;
காணல் தரும் சேதிகண்டு
கவலை எனக்கு மகனே!
வாழும்காலம் யாவுமே
வண்ணக் கோலமல்ல;
வாழும்போது அறிந்திடுவாய்
வாழ்க்கை பாடம் நன்றாய்!
பார்க்கும்போதே பரிதவிக்கும்
நிலையும் இங்கே உண்டு;
பட்டபின்பு பாடம் கற்கும்
நிலை உனக்கே வேண்டா!
என்னவென்று உனக்குச் சொல்ல
எந்தன் செல்வமே?
எனை மிரட்டும் இக்காட்சி
சொல்லும் சேதி உனக்கு!
கவலையின்றித் திரியும்
உந்தன் கலங்கமற்ற மனதில்
கரைபடியா இருக்க வேண்டும்
காணும் காட்சி நீயும்!
பசுமையான மரத்தில்தானே
பாயும் நல்ல ஆணி;
பாலகனே நீ அறிவாய்
பழகப் பழக நாளும்!!
நெஞ்சதனில் நீதிநின்று
நீயும்போகத் தானே
நானுனக்குச் சொல்ல
நாளும் கதைகள்பல உண்டு!
கவலைவிடு காணும் காட்சி
சொல்ல வரும் சேதி!
காலம் வரும் நல்லபடி
வெல்ல நீயும் நீதி!

No comments:

Post a Comment