Apr 20, 2015

படக்கவிதை
மானுடம் வாழ
மாண்புடன் நாளும்
மாலைகள் தரித்து
மஞ்சளும் ஏகி
ஆயுதம் ஏந்தி
ஆண்டவன் வேண்டி
ஆகமம் பேணி
ஆதலைச் செய்து
நாட்டினில் ஊறும்
கேட்டினைத் தடுக்க
பூட்டினை உடைத்து
ஏட்டினை மாற்ற
நாங்களும் வந்தோம்
நான்மறை போற்றும்
நன்மகள் பாடி
நன்மைகள் பெறவே!
சாதி எமக்கில்லை; இது
சந்ததிப் பழக்கம்!
சாத்திரம் பேணி
சமத்துவம் பற்ற
போனவர் தொற்றி
வருபவர் காக்க
வாள்கொண்டு ஏற்கும்
வல்லமைப் பண்பே
வேறொன்றுமில்லை;
வீணே வதந்தியைத்
தடுத்து எங்கள்
தர்மத்தைக் காப்பீர்!
மதமென்னும் வழியும்
மண்சார்ந்த வழியே
மதமில்லை எமக்கு
மண்ணின் மாதரும் நாமே!
அன்புடன்
சுரேஜமீ


No comments:

Post a Comment