Apr 8, 2015

நம்புவோம் மண்ணை!

பொட்டல் காடும் 
வெட்ட வெளியும்
புழுதி மண்ணும்
போற பாதையும்
குத்தும் முள்ளும்
காயும் சூடும்
எனக்கு மட்டுமா
சொன்னா கேளு
உனக்கும் தானடா!!
ஊரைவிட்டுத் தள்ளி
ஊரணிப் பக்கம்
உண்ணப் போவோம் வா!
கழனி பார்த்து 
காலுமாறி மேய
நல்ல புல்லும்
இல்லையே!
பக்கத்துல
புல்லும் இல்லையே!
காடும் மேடும் 
காலும் நோக
நடந்து போனாலும்
நாலு வாய்
தண்ணி இல்லே…
தாயே என்செய்ய?
நீரிருந்த ஊரணி இப்போ
பேராப் போனதே
நிலத்து மண்ணை
பொளந்தெடுத்து
பட்டணம் சேர்த்துட்டான்
பட்டாவும் போட்டுட்டான்!
என்ன செய்ய
எஞ்சியிருக்கும்
கொஞ்சம் புல்ல
மேய  நீயுந்தான்
இந்த தூரம் போகனும்
வந்தேன் உன்னோட நானும்!
நம்ம வாழ்க்கை
நொந்த வாழ்க்கைப்
பழகிப் போனாலும்
பாரு நல்ல
பசுமைக் காலம்
திரும்ப வந்திடும்!
நானும் நீயும்
நம்புவொம் கண்ணு!
நம்புவோம் மண்ணை!!
அன்புடன் 
சுரேஜமீ


No comments:

Post a Comment