Apr 12, 2015

பார்வை நல்ல வழியிலே; பார்த்து நடக்க சொர்க்கமே!
முகம் பார்க்க முனைந்தேன்
முத்தத்தில் நனைத்தாள் தாய்!
முத்தென்று அணைத்தாள் நெஞ்சோடு;
முடிவிலா சொர்க்கம் இதுதானோ?
பார்வையால் புரிந்தது;
பார்த்த முகமாய் இருந்தது!
பாரமாய்ச் சுமந்தவள்தான்; 
பரவசமாய்ச் சொன்னாள் தந்தையென்று!
பக்கம் திரும்பினால்;
பக்கத் துணையிருக்கும்;
பகிர்ந்த தாயின் உதரம்;
பங்கெடுத்த உடன்பிறந்தோர்!
இப்படித்தான் அறிகிறேன்
இவ்வுலக வாழ்வையுமே;
இங்கே காணும் காட்சியும்
இருவிழி சொல் மந்திரம்!
ஏகிநிற்க மனமும்
ஏந்தி நிற்கும் எந்தையும்;
ஏறுகொண்டு காண்பது
ஏற்றம்பெறு காட்சியே!
ஐயம் கொண்ட தந்தையே
ஐயமறு வாழ்வையே;
ஐயமிலா மனதிலே
ஐயமின்றிக் கொள்வேன்யான்!
அருமருந்தாய் இருக்குமிந்த
அன்னை தந்தை வளர்ப்புமே;
ஆண்டவனின் கருணையால்
ஆகும் எல்லாம் நன்மையே!
பார்வை தந்த வாழ்க்கையே;
பார்க்கும் இந்த உலகமே!
பார்வை நல்ல வழியிலே
பார்த்து நடக்க சொர்க்கமே!

No comments:

Post a Comment