Apr 21, 2015

புரட்சிக்கவி பாரதிதாசன் நினைவு நாள் (ஏப்ரல் -21)




பார 'தீ' எனும் சுடர்
பற்றிய தீதான்
பாரதி தாசன்
பைந்தமிழ் நேசன்!

எட்டயபுரம் 
எட்டிப் பார்த்தது
என்னையும் பாட
எண்ணும் ஒருவனா என்று!

தமிழ் கொஞ்சியது
தன்னிகரற்ற 
தனயனின்
தகைசார் எழுத்தில்!

எது சுவை
என்போர்க்கு
கேள்வியைக்
கேட்டான்!

கனியா?
கரும்பின் சாறா?
தேனா?
தீம்பாகா?
பாலா?
தென்னை இளநீரா?

இவைதரும்
சுவை மிகும்
எவை தரும்
என் தமிழ் 

நிகரென்றான்!

அது மட்டுமா?

அமுதத் தமிழ்தான்
ஆருயிர் என்றான்!
வாழ்வும் தமிழ்;
வளமும் தமிழ் என்றான்!

இன்று நினையேல்
என்று நினைப்பது?
நன்று சொல்வேன்
நல்ல தமிழர்க்கு

நயமுடன் படிக்க
நாயகன்
பாரதிதாசன் 
நூலை!

- சுரேஜமீ

No comments:

Post a Comment