Apr 14, 2015

அம்பேத்கார் பிறந்தநாள் (14/04/2015)

அரசியல் சாசன
ஆசான்;
அடித்தட்டு மக்களின்
நேசன்;
அனைவரும் சமமேயென்ற
தாசன்;

சட்டத்தின் சமத்துவம்
சரிநிகர் சென்று
சாமானியனை அடைய
சரித்திரம் படைத்தோன்!

நாட்டிற்கு ஒரு சட்டம்
வீட்டிற்கும் அது பொருந்தும்
வீணில் எதற்கு ஒரு பிரிவு
விழிப்புடன் இருந்தால் என்றோன்!

ஒடுக்குதல் என்றும் தீதே
ஒற்றுமை நல்க வாழ்வே
ஏற்றுதல் வேண்டும் நாமே
வேற்றுதல் என்று ஒதுக்கா!

தாழ்ந்தவர் மேலே வந்தால்
தாழ்வே இல்லை வாழ்வில்
உயர்த்திட வேண்டி சட்டம்
செய்திட்ட அண்ணல் காரே!

சமூக நீதி வேண்டி
சாசனத் திருத்தம்
செய்த சாதனையாளர்
சாகேப் பிறந்த நாளிது!

நாளும் அவர்புகழ் பாடி
நாடும் போற்ற நாடி;
நானிலத்தில் இனி
நசுக்கப்பட்ட இனமில்லை; 

என வாழ்ந்து காட்டுவோம் வாரீர்
அண்ணல் அம்பேத்கார் சொல் பற்றி வாரீர்!!

அன்புடன்
சுரேஜமீ

No comments:

Post a Comment